குளிர் காலம்... பசுமை எல்லாம் பனிப் போர்வைக்குள் படுத்துறங்கும் காலம் பகலவன்
வந்தால் உறக்கம் போகும் - என்ற கதைகள் செல்லாத காலம் உறக்கமா, இறப்பா என்ற உறுத்தலை
உருவாக்கும் உறைபனிக் காலம் இயற்கை இறந்ததோ என நிலமகள் வெள்ளை உடையில் வலம்
வரும் காலம்
வந்தது வசந்தம் கலைந்தது உறக்கம் பசுமை உலகின் பரவசம் இயற்கை
இறக்கவில்லை என்ற விடைகள் தந்தன விதைகள் விதைக்குள் உறங்கிய விந்தைகள் விழித்தெழ படர்ந்தது
உலகெங்கும் பசுமைக் கம்பளம்