2012-03-23 15:11:48

ஊடங்கள் வெளியிட்டு வரும் செய்திகளைப் பெரிதுபடுத்தாமல், பன்னாட்டு அமைப்புக்கள் லிபியாவுக்கு வருகை தர வேண்டும் - ஆயர் Martinelli


மார்ச்,23,2012. லிபியாவில் நிலவும் உண்மை நிலையைப் சரிவரப் புரிந்து கொள்ளாமல், ஊடகங்கள் எதிர்மறையான செய்திகளையே வெளியிட்டு வருவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்று Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giovanni Innocenzo Martinelli, கூறினார்.
ஊடங்கள் வெளியிட்டு வரும் தவறான எண்ணங்களுக்கு நேர் மாறாக, லிபியா நாட்டு மக்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையுடன் இருக்கின்றனர் என்றும் அப்போஸ்தலிக்க நிர்வாகி எடுத்துரைத்தார்.
ஊடகங்களின் செய்திகளால் பல நாட்டைச் சார்ந்த பிறரன்பு அமைப்புக்கள் லிபியாவுக்கு வந்து உதவிகளை மேற்கொள்ள தயங்குகின்றனர் என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய ஆயர் Martinelli, இந்தச் செய்திகளைப் பெரிதுபடுத்தாமல், பன்னாட்டு அமைப்புக்கள் தங்கள் நாட்டுக்கு வருகை தர வேண்டும் என்று விண்ணப்பம் விடுத்தார்.
இன்னும் ஆங்காங்கே போராடிவரும் குழுக்களிடம் ஆயுதங்கள் இருப்பதால், அவ்வப்போது வன்முறைகள் வெடிக்கின்றன என்பதையும் எடுத்துரைத்த ஆயர் Martinelli, லிபிய அரசு போராட்டக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.