மார்ச்22,2012. தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகக் கடந்த ஆகஸ்டிலிருந்து
நடைபெற்று போராட்டங்கள் குறித்து கடந்த ஆண்டிலும், இவ்வாண்டிலும் வத்திக்கான் வானொலி
நேர்காணல் நிகழ்ச்சிகளில் செய்திகளைத் தெளிவாகத் தந்தது. மார்ச் 19, இத்திங்களன்று தமிழக
அமைச்சரவை இந்த அணுமின் நிலையத்துக்கு ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து அங்குப் பணிகள்
முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதேசமயம் எதிர்ப்புப் போராட்டங்களும் வலுவடைந்து வருகின்றன.
இதையொட்டி முனைவர் எக்ஸ்.டி.செல்வராஜ் அவர்கள் மீண்டும் எமது தொலைபேசி நேர்காணலில்.......
முனைவர் எக்ஸ்.டி.செல்வராஜ், ஒரு மனித உரிமை ஆர்வலர்..