2012-03-17 15:28:15

கவிதைக் கனவுகள் - இறைவனின் நாடித்துடிப்பு


விவிலியம் சொல்லும் அன்பு இலக்கியம்
பவுலின் சொல்லில் அன்பு இலக்கணம்
கொரிந்தியர் பெற்ற முதல் திருமுகம்
சொற்களில் பதிந்த இறைவன் திருமுகம்

“பொறுமை பரிவு கொள்ளும் அன்பு
புதுமை தினமும் புரியும் அன்பு
நேர்மை காண களித்திடும் அன்பு - நம்மை
மேன்மை வாழ்வில் சேர்த்திடும் அன்பு

“ஒளியை இருளில் காட்டும் அன்பு
பழியை மனதில் போக்கும் அன்பு
முடிவில்லாது வளர்ந்திடும் அன்பு - என்றும்
அழிவில்லாது நிலைத்திடும் அன்பு

“தளரா உறுதி கொள்ளும் அன்பு
தனதாய் எதுவும் கொள்ளாது அன்பு
உண்மை என்றும் நாடிடும் அன்பு - அந்த உண்மை இறைவன் நாடியே அன்பு”







All the contents on this site are copyrighted ©.