மத்திய கிழக்குப் பகுதியின் நிலை குறித்து அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் கவலை
மார்ச்16,2012. மத்திய கிழக்குப் பகுதியில் இடம் பெறும் மோதல்கள் குறித்த தங்களது கவலையை
வெளியிட்டுள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள். அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின்
நிர்வாகப் பணிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து தினமும்
வெளியாகும் வன்முறை, இரத்தம் சிந்தல், துன்பங்கள் போன்ற செய்திகள் எவரையும் அக்கறையின்றி
இருக்கச் செய்யாது என்று கூறப்பட்டுள்ளது. பிளவையும் வெறுப்பையும் விதைக்கும் மக்கள்
மனம் மாற வேண்டுமென்றும், தங்களது குடிமக்களின் உரிமைகளையும் மாண்பைும் அந்தந்த நாடுகளின்
தலைவர்கள் மதிக்க வேண்டுமென்றும் அவ்வறிக்கை வலியுறுத்துகிறது. அரசியலில் நிச்சயற்றதன்மை,
பொருளாதாரத்தில் நெருக்கடி, சமூகத்திலும் கலாச்சாரத்திலும் பிரச்சனை போன்ற காலங்களில்,
வேற்றுமைகளைக் கடந்து அமைதியைக் கட்டி எழுப்புமாறு நன்மனம் கொண்ட அனைவருக்கும் அமெரிக்க
ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.