2012-03-16 15:06:04

கவிதைக் கனவுகள்.......... ஒருவர் மற்றவர்க்காய் வாழ்வோம்


வாழ வேண்டும்.
நீயும் வாழ வேண்டும்
நானும் வாழ வேண்டும்
இதில் விட்டுக்கொடுப்பு இல்லை.

நீ வாழ்ந்தால்தான்
என் வாழ்வும் வளம் பெறும்
நீ புழுதியில் புரண்டால்
என் சுவரும் அழுக்காகும்
உன் வீட்டுத் தீ
என் கூரையையும் எரித்து விடும்

மாற்று எண்ணங்களை விதைத்து
அறுவடைக்கு இணைந்து வந்து
பாதிப் பாதியாய் பிரித்துக் கொள்வோம்
நம் பாசம் வேசமில்லை என்பதால்
நாசமும் மோசமும் இங்கு நுழைவதில்லை

என் அனுபவங்கள் உனக்குப் பாடமாயின
உன் அணுகுமுறைகள் எனக்குப் பாதையாயின
நீயும் மனிதன் தான்.
அதை உணர்ந்தபோதுதான்
என் ஆணவம் கரைந்தது,
உன் வாழ்வில் என் வாழ்வு என்பது புரிந்தது.







All the contents on this site are copyrighted ©.