மரண தண்டனை, கருக்கலைப்பு, ஓரின திருமணங்கள் ஆகிய அம்சங்களைக்
குறித்து Zimbabwe ஆயர்கள் வெளியிட்டுள்ள மடல்
மார்ச்,15,2012. ஒப்புரவு, நீதி மற்றும் அமைதிக்கென ஆப்ரிக்கத் திருஅவை உழைக்க வேண்டும்
என்று ஆப்ரிக்க சிறப்பு மாமன்றமும், திருத்தந்தையும் கூறியுள்ளதற்கு இணங்க, Zimbabwe
நாட்டில் உள்ள கத்தோலிக்கர்கள் நீதி, ஒப்புரவு, அமைதிக்கு எவ்வகையில் உழைக்க முடியும்
என்ற கேள்வியை அந்நாட்டு ஆயர்கள் எழுப்பியுள்ளனர். தவக்காலத்தையொட்டி, இவ்வாரம் Zimbabwe
ஆயர்கள் வெளியிட்டுள்ள ஒரு சுற்று மடலில், திருத்தந்தை கடந்த நவம்பர் மாதம் Benin நாட்டிற்கு
வந்தபோது, ஆயர்களுக்கு அளித்த சிறப்பு அப்போஸ்தலிக்க அறிவுரையான Africae Munus என்ற மடலை
தங்கள் சுற்றுமடலின் துவக்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளனர் ஆயர்கள். Zimbabwe பாராளு
மன்றம், தற்போது அந்நாட்டின் புதிய சட்டங்களைக் குறித்து விவாதங்களை மேற்கொண்டுள்ள வேளையில்,
மரண தண்டனை, கருக்கலைப்பு, ஓரின திருமணங்கள் ஆகிய அம்சங்களைக் குறித்து ஆயர்கள் தங்கள்
மடலில் எடுத்துரைத்துள்ளனர். சாவுக்குப் பதில் வாழ்வைத் தேர்ந்தெடுத்தல், நீதியும்
அமைதியும் இணைதல், அன்பு செய்யவே படைக்கப்படுதல் ஆகிய முக்கிய பகுதிகளாக விளங்கும் இம்மடலில்
ஆங்காங்கே மக்கள் சிந்திக்க வேண்டும் என்ற கருத்துடன், அமைதி இடைவெளிகளும் வழங்கப்பட்டுள்ளன.