மார்ச் 14, 2012. – கவிதைக் கனவுகள்.............மாற முன்வாருங்கள்
நண்டுகள் முன்னோக்கியோ பின்னோக்கியோ ஓடுவதில்லை, பக்கவாட்டாகவே ஓடுகின்றன. எந்தத்
தலைமுறையிலிருந்து இந்தக் கோணல் என ஆராயத் தேவையில்லை. அது அப்படித்தான்.
சிறுவயதின்
தவறுகளுக்காய் முதிர் வயதில் வருந்தாதவர் இல்லை. இன்றளவும் அணுகுமுறைகளில் மாற்றமில்லையே, எனக்
கேட்காதீர்கள். அது அப்படித்தான்.
ஓடைக்கற்கள் உருமாறுகின்றன. சாணைக்கற்கள் உருமாற்றுகின்றன. கையாள்வதும்
கையாளப்படுவதும் என விளக்கம் தராதீர்கள். அது அப்படித்தான்.
உலகம் ஒருநாள்
மாறும் என்ற நம்பிக்கையிருக்கிறது. யுகம் யுகமாய் இப்படித்தானே இருக்கிறது என விதண்டவாதம்
செய்யாதீர்கள். அது அப்படியல்ல. இன்றே மாறும், ஒவ்வொருவரும் மாற முன்வந்தால்.