2012-03-13 15:05:46

கவிதைக் கனவுகள் படைப்பினில் பரமன்...


ஆர்த்தெழும் கடலலை ஒலியினிலே
அவன் குரல் கேட்டுநான் மகிழ்ந்திருப்பேன்
காரிருள் கிழித்தேழும் கதிரவனில்
அவன் முக ஒளியினைக் கண்டிருப்பேன்

மாமலை முகடுகள் அமைதியிலே
அவனிசை ஒலிப்பதைக் கேட்டிருப்பேன்
சோலையில் உலவிடும் தென்றலிலே
அவனருள் அணைப்பினை உணர்ந்திடுவேன்

திரண்டெழும் கருமுகில் குழுவினிலே
அவன் பெரும் அன்பினை அறிந்திடுவேன்
தரணியை நிறைத்திடும் பொருளனைத்தும்
அவன்தரும் கொடையென மகிழ்ந்திடுவேன்

படைப்பினில் கலந்தும் கடந்தவனை
படைப்புடன் இணைந்து பணிந்திடுவேன்








All the contents on this site are copyrighted ©.