பாகிஸ்தானில் கடத்தப்பட்ட இரு கிறிஸ்தவர்களின் விடுதலை முயற்சிகளுக்கு புது குழு
மார்ச்,12,2012. பாகிஸ்தானில் கடந்த மாதம் கடத்தப்பட்ட இரு கிறிஸ்தவ அதிகாரிகளின் விடுதலையைப்
பெறும் நோக்கில் கிறிஸ்தவ சபைகளின் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவால்
பாகிஸ்தானில் நடத்தப்படும் நல்ல சமாரியன் மருத்துவமனையின் அதிகாரிகள் Inderias Jawaid
மற்றும் Issac Samson ஆகியோரைக் கடத்தியவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளாக இருக்கலாம் என
காவல்துறை தன் சந்தேகத்தை வெளியிட்டுள்ள வேளை, இவர்களின் விடுதலைக்கான முயற்சிகளை மேற்கொள்ள
ஒரு கத்தோலிக்க குரு, சில கிறிஸ்தவ சபை குருக்கள் மற்றும் அரசியல்வாதிகளை உள்ளடக்கிய
13 பேர் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இவ்விரு கிறிஸ்தவர்களின் விடுதலைக்காக வரும் வெள்ளியன்று பாகிஸ்தானின் அனைத்து கிறிஸ்தவ
சபைகளும் உண்ணா நோன்பை கடைபிடிக்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளது.