கியுபாவில் சமய சுதந்திர மீறல்கள் அதிகரித்து வருகின்றன - CSW அறிக்கை
மார்ச் 10,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இம்மாதம் 23 முதல் 29 வரை மெக்சிகோவுக்கும்
கியுபாவுக்கும் திருப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் வேளை, கியுபாவில் சமய சுதந்திர மீறல்கள்
அதிகரித்து வருகின்றன என்று CSW என்ற உலகளாவிய கிறிஸ்தவ தோழமை அமைப்பு கூறியது. 2011ம்
ஆண்டு முழுவதும் 28 சமய சுதந்திர மீறல் விவகாரங்கள் இடம் பெற்றவேளை, இவ்வாண்டு தொடக்க
முதல் இதுவரை 20 விவகாரங்கள் இடம் பெற்றுள்ளன என்று CSW அறிக்கை கூறுகிறது. மக்கள்
ஆலய வழிபாடுகளில் கலந்து கொள்வதைத் தடை செய்தல், திருஅவைக்குரிய நிலங்களைப் பறிமுதல்
செய்தல், அதிகாரப்பூர்வமான நச்சரிப்புகள், அடிகள், திருஅவைத் தலைவர்களின் கைதுகள் எனச்
சமய சுதந்திர மீறல்களைப் பட்டியலிட்டுள்ளது கிறிஸ்தவ தோழமை அமைப்பு. வெள்ளை இயக்கத்தைச்
சேர்ந்த பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்த கத்தோலிக்க மனித உரிமை ஆர்வலர்கள் ஆலய வழிபாடுகளில்
கலந்து கொள்வது வலுவந்தமாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.