பிலிப்பீன்ஸ் கர்தினால் Jose Sanchez இறைபதம் அடைந்தார், திருத்தந்தை இரங்கல் தந்தி
மார்ச்09,2012. திருப்பீட குருக்கள் பேராயத்தின் முன்னாள் தலைவரான கர்தினால் Jose Sanchez
இறைபதம் எய்தியதையடுத்து தனது இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இறந்த
கர்தினால் Sanchezன் இறப்பையொட்டி, பிலிப்பீன்சின் Cebu உயர்மறைமாவட்டத்தின் முன்னாள்
பேராயர் கர்தினால் Ricardo Vidal க்கு இரங்கல் தந்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, நம் ஆண்டவருக்கும்,
அவரது திருஅவைக்கும், குறிப்பாக குருத்துவ வாழ்வுக்கும் பலர் தங்களை அர்ப்பணிப்பதற்கு
கர்தினால் Sanchez ன் எடுத்துக்காட்டான வாழ்வு உதவும் என்ற தனது நம்பிக்கையை குறிப்பிட்டுள்ளார். பிலிப்பீன்சின்
மனிலாவில் இவ்வெள்ளிக்கிழமை மரணமடைந்த 91 வயது கர்தினால் Sanchez, குருவாக 65 ஆண்டுகளுக்கு
மேலாகவும், ஆயராக 43 ஆண்டுகளுக்கு மேலாகவும், கர்தினாலாக 20 ஆண்டுகளுக்கு மேலாகவும் இருந்துள்ளார். திருப்பீடத்தில்
ஒரு துறைக்கு மேற்பட்ட துறைகளில் பணியாற்றிய முதல் பிலிப்பீன்ஸ் நாட்டவரான கர்தினால்
Sanchez, 47 வது வயதில் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டவர். திருப்பீட விசுவாசப்பரப்புப்
பேராயத்தின் செயலராகவும், திருப்பீட குருக்கள் பேராயத்தின் தலைவராகவும், திருப்பீட சொத்து
நிர்வாகத்தின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார் கர்தினால் Jose Sanchez .