தியானச் சிந்தனைகளை வழங்கிய கர்தினாலுக்குத் திருத்தந்தை நன்றியும் பாராட்டும்
மார்ச்03,2012. நாம் திருமுழுக்கில் இறைவனோடு ஒன்றிப்பு அடைந்த பேருண்மையை மீண்டும் கண்டுணருவதற்கு,
அமைதி, செபம், குறிப்பாக, திருநற்கருணை ஆராதனை வழியாக இந்தத் தியான நாட்களில் தங்களை
வழிநடத்திச் சென்றதற்கு கர்தினால் Laurent Monsengwo Pasinya வுக்கு நன்றி தெரிவித்தார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட். திருப்பீடத் தலைமையக அதிகாரிகளுடன் வத்திக்கானில் ஒரு
வாரம் தியானம் செய்து இச்சனிக்கிழமை காலை அதனை முடித்துள்ள திருத்தந்தை, தங்களுக்குத்
தியானச் சிந்தனைகளை வழங்கிய Congo நாட்டு Kinshasa கர்தினால் Monsengwo Pasinya வுக்கு
எழுதிய நன்றிக் கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தத் தியானச் சிந்தனைகளை,
கர்தினால் வழங்கிய விதம், ஆப்ரிக்கத் திருஅவையின் விசுவாசத்திற்குச் சிறப்பான சாட்சியத்தை
உணர முடிந்தது எனவும் பாராட்டிய திருத்தந்தை, இத்தியானச் சிந்தனைகளுக்கு ஏற்ப, அவ்வப்போது
அவர் உரைத்த அழகிய கதைகள், குறிப்பாக பெரும்பாலான ஆப்ரிக்கக் கதைகள் சிந்திக்கக்கூடியதாகவும்,
தியானத்திற்கு உதவியதாகவும் இருந்தன என்றார்