2012-03-03 13:06:09

சிரிய அதிகாரிகள் குடிமக்களுக்கு எதிராகக் குற்றமிழைக்கிறார்கள் – ஐ.நா.பொதுச் செயலர்


மார்ச்03,2012. சிரியாவில் ஹோம்ஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கொடூரமானது என்று விவரித்து, அரசு தனது சொந்த மக்களையே திட்டமிட்டு தாக்குகின்றது என்று குறை கூறியுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
சிரிய அதிகாரிகள் தங்களது குடிமக்களுக்கு எதிராகவே பரவலாகவும் வெளிப்படையாகவும் குற்றங்களைச் செய்துள்ளனர் என்றுரைத்த பான் கி மூன், சர்வதேச சமூகமும் தனது கடமையிலிருந்து தவறியுள்ளது என்று கவலை தெரிவித்தார்.
ஹோம்ஸ் நகரில் குண்டு வைத்து தாக்கப்பட்ட பகுதிக்குச் செஞ்சிலுவை சங்கம் செல்வதற்கு அனுமதிக்காகக் காத்துக் கொண்டிருந்த வேளை, இவ்வாறு கூறினார் பான் கி மூன்.







All the contents on this site are copyrighted ©.