போஸ்னியா-எர்செகொவினாவில் திருஅவையின் வருங்காலம் குறித்து திருப்பீடச் செயலர் கவலை
மார்ச்02,2012. பால்கன் பகுதி நாடான போஸ்னியா-எர்செகொவினாவில் திருஅவையின் வருங்காலம்
கவலை தருவதாக இருப்பதாக திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே அண்மையில்
எழுதிய கடிதம் கூறுகிறது. போஸ்னியா-எர்செகொவினா ஆயர்களுக்குத் திருத்தந்தையின் பெயரில்
கடிதம் அனுப்பியுள்ள கர்தினால் பெர்த்தோனே, 1991ம் ஆண்டில் சுமார் 8 இலட்சமாக இருந்த
கத்தோலிக்கரின் எண்ணிக்கை, தற்போது சுமார் 4 இலட்சத்து 40 ஆயிரமாகக் குறைந்துள்ளது என்று
குறிப்பிட்டுள்ளார். அந்நாட்டின் பல பங்குத்தளங்களில் வயதானவர்களே இருக்கிறார்கள்
எனவும், கத்தோலிக்கரின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்தே வருகின்றது எனவும் கர்தினாலின்
கடிதம் கூறுகிறது. போஸ்னியா-எர்செகொவினாவின் சுமார் 46 இலட்சம் மக்களில் கத்தோலிக்கர்
பத்து விழுக்காட்டுக்கும் குறைவே. முஸ்லீம்கள் 40 விழுக்காட்டினர் மற்றும் கீழைரீதி
ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியினர்.