கியுப மக்கள் திருத்தந்தையைப் பாசத்தோடு வரவேற்க ஆயர்கள் அழைப்பு
மார்ச்02,2012. கியுபா நாட்டிற்கு, நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் வருகை தரும் திருத்தந்தை
16ம் பெனடிக்ட் அவர்களை, ஆர்வத்தோடும் பாசத்தோடும் வரவேற்குமாறு அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு
விடுத்துள்ளனர். இம்மாதம் 26 முதல் 28 வரை, திருத்தந்தை கியுபாவிற்குத் திருப்பயணம்
மேற்கொள்ளவிருப்பதையொட்டி, அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் இவ்வியாழனன்று செய்தி வெளியிட்டுள்ள
ஆயர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். இத்திருப்பயணத்திற்குத் தயாரிப்பாக, இம்மாதம் 15ம்
தேதியன்று அனைத்துப் பங்குகளிலும் திருநற்கருணை ஆராதனை நடத்தவும், 16ம் தேதியன்று நோன்பு
கடைப்பிடிக்கவும், 17ம் தேதியன்று பிறரன்புப் பணிகள் செய்யவும் ஆயர்களின் செய்தி அழைப்பு
விடுக்கிறது. கியுபத் திருஅவை 2012ம் ஆண்டை யூபிலி ஆண்டாகக் கடைப்பிடித்து வருவதைச்
சுட்டிக் காட்டியுள்ள ஆயர்கள், பிறரன்பு அன்னை வழியாகப் பெற்ற நன்மைகளுக்கு நன்றி கூறவும்
வலியுறுத்தியுள்ளனர். Santiago de Cuba மற்றும் Havana நகரங்களில் திருத்தந்தை நிகழ்த்தும்
திருப்பலிகளில் கலந்து கொள்ளுமாறும் ஆயர்கள் கேட்டுள்ளனர். கியுபாவின் பாதுகாவலியான,
கோப்ரே பிறரன்பு அன்னைமரி திருவுருவம் கண்டுபிடிக்கப்பட்டதன் 400ம் ஆண்டையொட்டி திருத்தந்தையின்
கியுபாவிற்கானத் திருப்பயணம் இடம்பெறவுள்ளது.