நேர்காணல் – கூடங்குளம் அணுமின் நிலையம் : சிலக் கட்டுக்கதைகள், உண்மைகள் பாகம் 1
மார்ச் 01,2012. கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து நாளும் ஒரு செய்தி என ஊடகங்களில்
செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த அணுமின் நிலையம் தொடர்பாக, தமிழக அரசு நியமித்துள்ள
நிபுணர் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்ததன் பின்னணியில், போராட்டக்குழுவினர் தமிழக முதல்வர்
ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியுள்ளனர். அச்சந்திப்பின் போது, முதல்வர் ஜெயலலிதா அனைத்தையும்
பொறுமையாகக் கேட்டுக்கொண்டதாக, போராட்டக்குழுவினரின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், உண்மையான நிலவரம் குறித்து அறிவதற்காக, நம்வாழ்வு வார இதழ் ஆசிரியர் அ.பணி
டொமினிக் என்ற தஞ்சை டோமி அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். தமிழக ஆயர் பேரவையின்
தனிப்பெரும் வார இதழான நம்வாழ்வு வார இதழிலும், “கூடங்குளம் அணுமின் நிலையம் : சிலக்
கட்டுக்கதைகள், உண்மைகள்” என்ற தலைப்பில் கட்டுரைகள் பிரசுரமாகியிருந்தன. அ.பணி டொமினிக்
அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு வழங்கிய நேர்காணலின் முதல் பகுதி இதோ....