திருப்பீடப் பிரதிநிதிகளும், வியட்நாம் அரசின் பிரதிநிதிகளும் இணைந்து
வெளியிட்ட அறிக்கை
பிப்.29,2012. திருஅவையின் செயல்பாடுகளுக்கு வியட்நாம் அரசு அளித்துள்ள ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது
என்றும், சிறப்பாக, 2010ம் ஆண்டு வியட்நாம் திருஅவை தன் ஜுபிலி கொண்டாட்டங்களை நடத்துவதற்கு
அரசு அளித்த அனுமதிகள் பாராட்டுக்குரியது என்று வத்திக்கான் அறிக்கை ஒன்று கூறுகிறது. இத்திங்கள்
மற்றும் செவ்வாய் ஆகிய இரு நாட்கள் வியட்நாமின் Hanoi நகரில் திருப்பீட பிரதிநிதிகளுக்கும்,
வியட்நாம் அரசின் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் இறுதியில் திருப்பீடப்
பிரதிநிதிகளும், வியட்நாம் அரசின் பிரதிநிதிகளும் இணைந்து வெளியிட்ட ஓர் அறிக்கையில்
இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜுபிலி கொண்டாட்டங்களின்போது திருப்பீடத்தின்
சிறப்புப் பிரதிநிதியாக அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட பேராயர் Leopoldo Girelli, வியட்நாமில்
தொடர்ந்து திருப்பீடத்தின் சார்பில் தன் பயணங்களை மேற்கொள்ள வியட்நாம் அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடுகளுக்கான
உறவுகளின் திருப்பீட அவை துணைச் செயலர் பேராயர் Ettore Balestrero தலைமையில் இந்தக் கலந்துரையாடலில்
ஈடுபட்டிருந்த திருப்பீடப் பிரதிநிதிகள், தங்கள் கூட்டத்திற்குப் பின், அந்நாட்டின் அமைச்சர்கள்
சிலரையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்தனர் என்று வத்திக்கான் செய்திக் குறிப்பொன்று
கூறுகிறது.