அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஆயர்கள் மாமன்றத்தின் முக்கியக் கருப்பொருளாக குடும்பங்கள்
அமையும்
பிப்.29,2012. இவ்வாண்டு அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஆயர்கள் மாமன்றத்தின் முக்கியக்
கருப்பொருளாக குடும்பங்கள் அமையும் என்று வத்திக்கான் அறிக்கை ஒன்று கூறுகிறது. ஆயர்கள்
மாமன்றத்தின் செயற்குழு இத்திங்களன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், விசுவாசத்தின் அடிப்படையாக
அமைவது குடும்பங்களே என்பதால், இளையோருக்கு விசுவாசத்தைப் புகட்டும் ஒரு முக்கிய கருவியாக
குடும்பங்கள் அமையவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளிலிருந்தும் தெரிவு
செய்யப்பட்டுள்ள அனுபவம் மிக்க அருள்பணியாளர்கள், கர்தினால் Francis George தலைமையில்
உருவாக்கி வரும் ஒரு முக்கிய கட்டுரை, ஆயர் மாமன்றத்தின் விவாதங்களுக்கு மையமாக இருக்கும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு அக்டோபர் மாதம் திருத்தந்தையால் அறிவிக்கப்பட
உள்ள விசுவாச ஆண்டு, வரும் ஆண்டு நவம்பர் வரை நீடிக்கும். இந்த விசுவாச ஆண்டின் ஒரு முக்கிய
நிகழ்வாக ஆயர்களின் இந்த மாமன்றம் நடைபெறும்.