2012-02-27 15:01:53

நைஜீரியாவில் ஞாயிறு திருவழிபாடு நடைபெற்ற கிறிஸ்துவக் கோவிலில் தாக்குதல்


பிப்.27,2012. ஆப்ரிக்காவின் நைஜீரியாவில் ஞாயிறு திருவழிபாடு நடைபெற்ற கோவிலில் தற்கொலைப் படையினரால் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட, மூவர் கொல்லப்பட்டனர், மற்றும் 38 பேர் காயமுற்றனர்.
வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ஒரு வாகனத்தை Jos என்ற ஊரில் உள்ள கிறிஸ்துவின் ஆலயத்தில் இடித்து, இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு குழுவும் பொறுப்பு ஏற்கவில்லை எனினும், இத்தாக்குதலின் அம்சங்களை நோக்கும்போது, இது Boko Haram குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
இத்தாக்குதலைத் தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த இளையோர் வன்முறைகளில் ஈடுபட்டதால், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன என்றும் செய்திகள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.