2012-02-27 15:03:55

ஜாம்பியா நாட்டு வருங்காலம் குறித்து நம்பிக்கை பிறந்துள்ளதாக ஐ.நா. பொதுச்செயலர்


பிப்.27,2012. மக்களாட்சிக் கொள்கைகள், மனித உரிமைகள் மற்றும் கல்வியில் ஜாம்பியா நாட்டு இளைஞர்களின் ஆர்வத்தைக் காணும்போது, அந்நாட்டு வருங்காலம் குறித்த புது நம்பிக்கைகள் பிறந்துள்ளதாக அறிவித்தார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
ஜாம்பியா நாட்டிற்கான தன் முதல் பயணத்தை இஞ்ஞாயிறன்று முடித்து, அங்கோலா செல்லும் முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஐ.நா. பொதுச்செயலர், ஜாம்பியாவில் இளையதலைமுறை மீது நம்பிக்கைக்கொண்டு அரசு அதிக அளவில் முதலீடு செய்துள்ளதைக் காணமுடிகிறது என்றார்.
நாட்டின் குழந்தைகள் மீது அக்கறை காட்டி, அவர்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும்போது, அந்நாடு எப்படியும் வலிமை மிக்கதாகவே இருக்கும் என்றார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.








All the contents on this site are copyrighted ©.