2012-02-24 15:05:27

புதிய நற்செய்திப்பணித் திட்டத்தில் 12 ஐரோப்பிய மறைமாவட்டங்கள்


பிப்.24,2012. ஒரு சிறப்பான புதிய நற்செய்திப்பணி திட்டத்தில் 12 ஐரோப்பிய மறைமாவட்டங்கள் இத்தவக்காலத்தில் ஈடுபட்டுள்ளன.
புதிய நற்செய்தி அறிவித்தல் என்ற தலைப்பில், வருகிற அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்குத் தயாரிப்பாக இத்திட்டம் அமைந்துள்ளது.
இத்திட்டம் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, இங்கிலாந்தின் Liverpool பங்குத்தந்தை பேரருட்திரு Peter Fleetwood, திருஅவைக்கும், நற்செய்திக்கும், இயேசு என்ற மனிதருக்கும், மிகுந்த பிரமாணிக்கத்துடன் இருப்பது குறித்து இத்தவக்காலத்தில் அதிகம் வலியுறுத்தப்படுவதாகக் கூறினார்.
பார்செலோனா, புடாபெஸ்ட், டப்ளின், ஃபிராங்பெர்ட், லிஸ்பன், பாரிஸ், தூரின், வியன்னா, பிரசெல்ஸ், வார்சா, சாக்ரப் ஆகிய ஐரோப்பிய நகரங்களில் Mission Metropolis என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.







All the contents on this site are copyrighted ©.