கல்கத்தாவின் புதிய பேராயராக வாரிசுரிமைப் பேராயர் பணியேற்பு
பிப்.23,2012. கல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் பேராயர் லூக்காஸ் சிர்கார் பணிஓய்வு பெறுவதை
முன்னிட்டு அந்த உயர் மறைமாவட்டத்தின் பேராயராக பதவியேற்றுள்ளார் கல்கத்தா வாரிசுரிமை
பேராயர் தாமஸ் டிசூசா. 1936ம் ஆண்டு, செப்டம்பர் 24ம் தேதி பிறந்த சலேசிய சபை பேராயர்
சிர்கார், தான் பதவி விலகுவதற்கான விருப்பத்தைச் சமர்ப்பித்ததை, இவ்வியாழனன்று திருத்தந்தை
ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, புதியப் பேராயராகப் பதவியேற்றுள்ளார் வாரிசுரிமைப் பேராயர்
டிசூசா. கலகத்தா உயர்மறைமாவட்டத்தின் புதியப் பேராயர் தாமஸ் டிசூசா, 1950ம் ஆண்டு
பிறந்து, 1977ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1997ம் ஆண்டு Bagdogra
மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டு, அங்கேயே கடந்த ஆண்டு வரை பணியாற்றிய ஆயர் டிசூசா, கடந்த
மார்ச் மாதம் கல்கத்தா வாரிசுரிமைப் பேராயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டார்.