"மக்கள் சக்தி" என்றழைக்கப்படும் புரட்சி நாளை அரசியல் விவகாரமாக மாற்ற வேண்டாம் -
பிலிப்பின்ஸ் ஆயர் பேரவைத் தலைவர்
பிப்.22,2012. பிலிப்பின்ஸ் நாட்டில், "மக்கள் சக்தி" என்றழைக்கப்படும் புரட்சி நாளை
அரசியல் விவகாரமாக மாற்றாமல், பொதுநலனை வளர்க்கும் நம்பிக்கையை மக்களிடம் உருவாக்கும்
ஒரு நாளாக மக்கள் கொண்டாட வேண்டும் என்று பிலிப்பின்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Jose
Palma வேண்டுகோள் விடுத்துள்ளார். 1986ம் ஆண்டு பிப்ரவரி 22 முதல் 25 வரை பிலிப்பின்ஸ்
நாட்டில் Ferdinand Marcosன் சர்வாதிகாரப் போக்குகளுக்கு எதிராக எழுந்த 'மக்கள் சக்தி'
என்ற புரட்சியின் ஆண்டு நிறைவு ஒவ்வோர் ஆண்டும் அந்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. பிலிப்பின்ஸ்
நாட்டின் உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதிக்கு எதிராக எழுந்த குற்றச் சாட்டுகளின்
பேரில், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் பதவி நீக்கம் அரசியல் ஆதாயங்களுக்காக
மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்று கத்தோலிக்கத் திருஅவையும், பிற மத குழக்களும் கூறி வருகின்றன. இச்சூழலில்,
'மக்கள் சக்தி' என்ற இந்தப் புரட்சியின் 26ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட அரசு விடுத்துள்ள
அழைப்பும், ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Palma விடுத்துள்ள வேண்டுகோளும் ஒரே நேரத்தில்
வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.