நனவுலகின்
இயலாமைகளை,வெற்றிடங்களை கனவுகளாலேயே நிரப்புகிறோம். நிழலுக்கு நிறமூட்டுவது கற்பனை. நிலவிலேயே
கால்பதிப்பது கனவு. கற்பனை காலத்தால் அழியும், கனவுகளோ காலங்களை உருவாக்கும். கற்பனை
வெற்றுரு எனில், உயிர் கொடுப்பது கனவே.
காந்தி கண்டது சுதந்திரக் கனவு. கனவு
காணுங்கள். கனவுகளை விதையுங்கள், சாயம்பூசுங்கள். நன்மை துளிர்விடும் கனவுகள் தேவை. பலன்நிறை
கனவுகளை நனவாக்கத் தெரியும் மனிதர்கள் தேவை. கலாம் கண்ட கனவைக் காணுங்கள் நல்கனவுகளின்
காரணமாய் பல காந்திகளும் கலாம்களும் பிறக்கட்டும்.