தவம். மதங்கள் உணர்த்தும் வழி மனங்களை உயர்த்தும் வழி
கருவிலிருந்து கல்லறை
வரை மனித வாழ்வின் பல நிலைகளில் உணர்ந்தும் உணராமலும் உடன்வருவது... தவம்.
குழந்தை
கருவில் உருவானதும் துவங்கும் தாயின், தந்தையின் தவம், வளர்ந்து மகளும், மகனும்
- உலகை வலம்வரும் வரைத் தொடரும். வலம்வரும் பாதையில் விரியும் வலைகளில் சிக்கும்
மகவுக்காய் தொடரும் தாயின், தந்தையின் தவம்.
கனவு மனதில் உருவானதும் உணவும்
உறக்கமும் துறந்து கனவு நனவாகும் வரை மனத்தைக் கட்டும் தவங்கள்.
புகழ்தேடி
தவம் - உலகைப் புறந்தள்ளி தவம் அறம் நாடி தவம் - தூய அகம் வேண்டி தவம்.