அயர்லாந்தில் குருக்களின் தவறான செயல்களுக்காக திருத்தந்தை ஆழ்ந்த வருந்தமடைந்தார் -
வத்திக்கான் அதிகாரி
பிப்.20,2012. அயர்லாந்தில் குருக்களுக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டுகள் கத்தோலிக்க
விசுவாசிகளை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியது என்பதை திருத்தந்தை நன்கு உணர்ந்து, குருக்களின்
தவறான செயல்களுக்காக அவரும் ஆழ்ந்த வருந்தமடைந்தார் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர்
கூறினார். அயர்லாந்து நாட்டிற்கு திருப்பீடத் தூதராக அண்மையில் நியமனம் பெற்ற பேராயர்
Charles Brown, இஞ்ஞாயிறன்று இப்பொறுப்பை ஏற்கும் வேளையில், Dublin பேராலயத்தில் ஆற்றிய
திருப்பலியில் இவ்வாறு கூறினார். திருஅவையில் குருக்களின் தவறான செயல்பாடுகள் வெளிவந்த
காலத்திலிருந்தே திருத்தந்தை இந்தப் பிரச்சனைக்கு தகுந்த வகையில் தீர்வு காண வேண்டும்
என்பதில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார் என்பதைக் கூறிய திருப்பீடத் தூதர், திருஅவையின்
இந்த முறைகேட்டைச் சரிசெய்வதற்கு திருத்தந்தை முழு முயற்சிகள் எடுத்து வருகிறார் என்பதையும்
அயர்லாந்து மக்களுக்கு எடுத்துரைத்தார். அகில உலக திருநற்கருணை விழாவை எதிர்நோக்கியிருக்கும்
அயர்லாந்தில், இந்த சிறப்பான ஆண்டில் தான் போறுப்பேற்றிருப்பதைக் குறித்து தன் மகிழ்வையும்
தெரிவித்தார் திருப்பீடத் தூதர் பேராயர் Charles Brown.