2012-02-18 15:43:47

பொது இடங்களில் சிகரெட்டுக்குத் தடை: வீட்டுக்குள் புகைப் பிடிப்பது அதிகரிப்பு


பிப்.18,2012. புகை, மது போன்றவை கெடுதல் என்று பிரச்சாரம் செய்யப்பட்டாலும், அவைகளின் விற்பனை, எவ்விதக் குறைவும் இல்லாமல் நடைபெறுகின்றது என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை இருப்பதால், வீடுகளில் புகைப்பிடிப்பது அதிகரித்திருக்கிறதா என்று சர்வதேச புகையிலைக் கட்டுப்பாடு வாரியம் அண்மையில் ஆய்வு நடத்தியது.
இத்தடைக்கு பிறகு வீட்டில் புகைப் பிடிப்போரின் எண்ணிக்கை அயர்லாந்தில் 25 விழுக்காடும், பிரான்சில் 17 விழுக்காடும், ஜெர்மனியில் 38 விழுக்காடும், நெதர்லாந்தில் 28 விழுக்காடும் அதிகரித்துள்ளன.
இது இங்கிலாந்தில் 22 விழுக்காடாக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது குறைவு. பொது இடத்தில் புகைப் பிடிக்க முடியாது என்பதால், வீட்டில் அதிகம் சிகரெட் பிடிக்கின்றனர். இதனால் வீட்டில் இருக்கும் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் ஆகியோர் சிகரெட் புகையை சுவாசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.