பிப்.18,2012. இச்சனிக்கிழமை புதிய கர்தினால்களாக உயர்த்தப்பட்ட 22 பேரையும் சேர்த்து
தற்போது திருஅவையில் 213 கர்தினால்கள் உள்ளனர். இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும்
தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 125. எண்பது வயதுக்கு மேற்பட்டவர்களின்
எண்ணிக்கை 88. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தனது பாப்பிறைப் பணிக்காலத்தில் நான்காவது
தடவையாக புதிய கர்தினால்களை அறிவித்துள்ளார். இவர் இதுவரை கர்தினால்களாக உயர்த்தியுள்ளவர்களின்
எண்ணிக்கை 84. தற்போது 71 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கர்தினால்களாக உள்ளனர். ஐரோப்பாவில்
119, வட அமெரிக்காவில் 21 (அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா), இலத்தீன் அமெரிக்கா 32, ஆப்ரிக்கா
17, ஆசியா 20 மற்றும் ஓசியானியா 4. கர்தினால்கல், கத்தோலிக்கத் திருஅவையின் இளவரசர்கள்
என அழைக்கப்படுகின்றனர்.