2012-02-18 15:24:22

கவிதைக் கனவுகள் - இருளில் புதைவதா? ஒளியில் கலப்பதா?


ஒளி தேவை...
சுட்டெரித்தாலும்... சூரிய
ஒளி தேவை.
ஒளி நோக்கி எப்போதும்
முகம் காட்டும், கரம் நீட்டும்
மலரும் செடியும் மறக்காமல் சொல்லும்
தெளிவான பாடம் ஒன்றே...
ஒளி தேவை.

ஒளி நோக்கி நாம் நடந்தால் - நம்
நிழல் நமக்குப் பின் விழும்
ஒளி மறுத்து திரும்பிச் சென்றால்
நிழல் நமக்கு முன் செல்லும்
நிழல் நம்மை வழி நடத்தினால் - வாழ்வு
விழலுக்கு இறைத்த நீராகும்

நிழலைத் தொடர்ந்து
நிம்மதி இழந்து
இருளில் புதைவதா?
ஒளியைத் தொடர்ந்து
நிம்மதி வளர்த்து
ஒளியில் கலப்பதா?

மலரும், செடியும் சொல்லும்
பயன்தரும் பாடங்கள் படிப்போம்








All the contents on this site are copyrighted ©.