ஒளி தேவை... சுட்டெரித்தாலும்... சூரிய ஒளி தேவை. ஒளி நோக்கி எப்போதும் முகம்
காட்டும், கரம் நீட்டும் மலரும் செடியும் மறக்காமல் சொல்லும் தெளிவான பாடம் ஒன்றே... ஒளி
தேவை.
ஒளி நோக்கி நாம் நடந்தால் - நம் நிழல் நமக்குப் பின் விழும் ஒளி மறுத்து
திரும்பிச் சென்றால் நிழல் நமக்கு முன் செல்லும் நிழல் நம்மை வழி நடத்தினால்
- வாழ்வு விழலுக்கு இறைத்த நீராகும்
நிழலைத் தொடர்ந்து நிம்மதி இழந்து இருளில்
புதைவதா? ஒளியைத் தொடர்ந்து நிம்மதி வளர்த்து ஒளியில் கலப்பதா?
மலரும்,
செடியும் சொல்லும் பயன்தரும் பாடங்கள் படிப்போம்