2012-02-16 13:54:32

ஜப்பானில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களின் ஆண்டு நினைவாக ஆயர்களின் கூட்டுத் திருப்பலி


பிப்.16,2012. கடந்த ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுனாமி ஆகிய இயற்கைப் பேரிடர்களின் ஆண்டு நினைவைக் கடைபிடிக்கும் வகையில் இப்புதனன்று டோக்கியோவின் Sekiguchi பேராலயத்தில் ஆயர்களின் கூட்டுத் திருப்பலி ஒன்று நடைபெற்றது.
ஜப்பான் தலத் திருஅவையில் தற்போது பணியாற்றிவரும் 17 ஆயர்களும் இணைந்து ஆற்றிய இத்திருப்பலியில், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அனுப்பியிருந்த செய்தியை ஜப்பான் திருப்பீடத் தூதர் பேராயர் ஜோசப் சென்னோத் வாசித்தார்.
ஜப்பானில் இப்பேரழிவுகள் நடைபெற்றது மார்ச் 11ம் தேதியே என்றாலும், ஜப்பான் ஆயர் பேரவை இத்திங்கள் முதல் வெள்ளி வரை மேற்கொண்டுள்ள ஆண்டுக் கூட்டத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக இத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இத்திருப்பலியில் பல்வேறு நாடுகளின் தூதர்களும் அவர்களது குடும்பங்களும் கலந்து கொண்டனர். திருப்பலிக்கு முன்னர், இப்பேரழிவுகளுக்குப் பின்னர் காரித்தாஸ் அமைப்பு மேற்கொண்ட பல்வேறு பணிகளை விளக்கும் டிஜிட்டல் புகைப்படங்கள் திரையில் காட்டப்பட்டன.








All the contents on this site are copyrighted ©.