இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுடன் கர்தினால் மால்கம் இரஞ்சித் சந்திப்பு
பிப்.15,2012. இலங்கையில் கடந்த சனிக்கிழமை முதல் திடீரென உயர்த்தப்பட்டுள்ள எரிபொருள்
விலைகளை எதிர்த்து, போராட்டங்களைத் துவக்கிய மீன்பிடித் தொழிலாளிகளை கர்தினால் மால்கம்
இரஞ்சித் மற்றும் பிற திருஅவை அதிகாரிகள் சந்தித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம்
பேசிய கர்தினால் இரஞ்சித், அவர்களது கோரிக்கைகளுக்குத் தலத் திருஅவையின் ஆதரவு உண்டு
என்றும், தான் அரசு அதிகாரிகளுடன் பேச முயற்சிகள் செய்வதால், அவர்கள் போராட்டத்தை நிறுத்த
வேண்டும் என்றும் கூறினார். இலங்கை அரசு துயர் துடைப்பையும் சலுகைகளையும் வழங்குவதற்குப்
பதில், எரிபொருளுக்கு நியாயமான விலைகளை நிர்ணயிப்பதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீன்பிடித் தொழிலாளிகள் ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த
பேட்டியொன்றில் கூறினர். Negombo, Kochchikade, Wennappuwa, Marawila, Chilaw, Mannar,
Colombo ஆகிய நகரங்களில் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்
என்று ஆசிய செய்திக் குறிப்பு கூறியது.