சிரியா இன்னொரு ஈராக்காக மாறும் ஆபத்து உள்ளது என்கிறார் அந்நாட்டு ஆயர்
பிப்.14,2012. பகைமை மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் சிரியாவில் ஒருமைப்பாட்டுணர்வுடன்
கூடிய பேச்சுவார்த்தைகள் ஊக்குவிக்கப்படவில்லையெனில் அந்நாடு இன்னொரு ஈராக்காக மாறும்
ஆபத்து உள்ளதாக கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு ஆயர் Antoine Audo. வெவ்வேறு குழுக்களிடையே
பழிவாங்கும் உணர்வுகளுக்கு ஊக்கமளிப்பதை கைவிட்டு, அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஊக்கமளிப்பது
சர்வதேச சமூகத்தின் கடமையாக இருக்க வேண்டும் என்று கூறிய அலெப்போ மறைமாவட்ட கல்தேய ரீதி
ஆயர் Audo, வன்முறைகள் பெருகியுள்ள போதிலும் குடிமக்கள் ஒற்றுமையுடன் செயல்படுவதைக் காணும்போது
மகிழ்ச்சியாக இருக்கின்றது என்றார். உயிரிழந்த இஸ்லாமிய குடும்பங்களுடன் தங்கள் ஒருமைப்பாட்டுணர்வைத்
தெரிவிக்கச் சென்ற இரு கிறிஸ்தவர்கள் தாக்குதலில் உயிரிழந்துள்ளது குறித்த கவலையையும்
வெளியிட்டார் ஆயர் Audo. இனம், மதம் என்ற எவ்வித பாகுபாடும் இன்றி அனைத்து சிரிய மக்களும்
வன்முறைகளாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தன் கவலையை வெளியிட்டார்
ஆயர் Audo.