2012-02-14 15:07:14

ஆப்ரிக்காவின் சாஹேல் பகுதி உணவு நெருக்கடி குறித்து உயர் மட்ட ஆலோசனை


பிப்.14,2012. வறட்சியாலும் உணவுப் பற்றாக்குறையாலும் பல இலட்சக்கணக்கானோரின் உயிர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆப்ரிக்காவின் சாஹேல் பகுதியில் மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைப்பது குறித்து இப்புதனன்று உரோம் நகரில் உயர்மட்ட கூட்டம் ஒன்று இடம்பெற உள்ளது.
ஐக்கிய நாட்டு நிறுவன உதவி அமைப்புகள், மனிதபிமான நிறுவனங்கள் மற்றும் உதவும் நாடுகள் இணைந்து உரோம் நகரின் WFP என்ற உலக உணவு திட்ட நிறுவனத்தின் தலைமையகத்தில் நடத்த உள்ள கூட்டம் குறித்து எடுத்துரைத்த அந்நிறுவனத்தின் உயர்மட்ட இயக்குனர் Josette Sheeran, சாஹேல் பகுதி மக்களுக்காக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நேரம் இதுவே என்றார்.
பருவம் தவறிய மழையாலும், மழையின்மையாலும் சாஹேல் பகுதியில் உணவு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.