2012-02-13 15:09:25

மலாவி மக்களின் விசுவாசத்தை ஆழப்படுத்த வேண்டியது, அவசியமான, அவசரமானத் தேவையாக உள்ளது - ஆயர் Montfort Stima


பிப்.13,2012. ஆப்ரிக்க நாடான மலாவியில் மக்களுக்கு மறைக்கல்வி வழங்கி, அவர்களின் விசுவாசத்தை ஆழப்படுத்த வேண்டியது, அவசியமான, அவசரமானத் தேவையாக உள்ளதென்று அந்நாட்டு ஆயர் Montfort Stima தெரிவித்தார்.
மலாவி நாட்டு கத்தோலிக்கர்களின் நிலை குறித்து Aid to the Church in Need (ACN) என்ற பிறரன்பு அமைப்புக்குப் பேட்டியளித்த Blantyre உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயர் Stima, ஒவ்வோர் ஆண்டும் ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகளும், 200 முதல் 300 வயது வந்தவர்களும் திருமுழுக்கு பெறும் அந்நாட்டில், குருக்களின் பற்றாக்குறையும் பெருமளவில் உள்ளது என்று கூறினார்.
80,000 கத்தோலிக்கர்கள் வாழும் பங்குகளில் இரு குருக்களே பணியாற்றுகின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டிய ஆயர் Stima, மக்களின் விசுவாசம் ஆழப்படுவதன் மூலம் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும் எடுத்துரைத்தார்.
மலாவி நாட்டின் 1 கோடியே, 30 இலட்சம் மக்கள் தொகையில், 80 விழுக்காட்டினர் கிறிஸ்தவர். இந்நாட்டில் 40 இலட்சம் கத்தோலிக்கர் வாழ்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.