பிப்.13,2012. ஈரானின் Shiraz எனுமிடத்தில் தனியார் வீடு ஒன்றில் செப வழிபாடு நடத்திவந்த
10 கிறிஸ்தவர்களைக் கைது செய்துள்ளது அந்நாட்டு பாதுகாப்புத் துறை. கிறிஸ்தவத்திற்கு
மதம் மாறிய 10 பேர் ஒரு வீட்டில் கூடியிருந்து செபித்துக்கொண்டிருந்தபோது, அங்கு திடீரென்று
புகுந்த, சாதாராண உடையணிந்த பாதுகாப்புத் துறையினர், அந்த பத்துப் பேரையும் கைது செய்து
அடையாளம் தெரியாத இடத்திற்கு எடுத்துச் சென்று சிறை வைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்
வைக்கப்பட்டுள்ள இடத்தை வெளிப்படுத்த மறுக்கும் பாதுகாப்புத்துறை, அவர்களின் குடும்பங்களுக்கும்
எவ்வித தகவலையும் வழங்க மறுத்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் Ahwaz எனுமிடத்திலுள்ள
கோவிலிலிருந்து கிறிஸ்தவ மறைபோதகரையும், சில கிறிஸ்தவர்களையும் ஈரான் காவல்துறை கைது
செய்துள்ளது. கிறிஸ்தவர்களை மேற்கத்திய நாடுகளின் ஒற்றர்களாக ஈரான் காவல்துறை சந்தேகிப்பதே
இக்கைதுகளுக்கான முக்கியக் காரணம் என செய்தி நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.