2012-02-11 13:47:31

குஜராத் அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென்ற உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இயேசு சபை மனித உரிமை ஆர்வலர் வரவேற்பு


பிப்.11,2012. குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு இடம் பெற்ற கலவரத்தில் அழிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட வழிபாட்டுத்தலங்களை குஜராத் அரசு மீண்டும் கட்டிக் கொடுக்க வேண்டும் மற்றும் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்று அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லியிருப்பதை வரவேற்றுள்ளார் இயேசு சபை அருள்தந்தை Cedric Prakash.
2002ம் ஆண்டு இடம் பெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்கத் தவறியுள்ளது என்று, குஜராத் இசுலாமிய நிவாரணக் குழு (IRCG) வழக்குப் பதிவு செய்திருந்ததை விசாரித்த உயர்நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
2002ம் ஆண்டு இடம் பெற்ற கலவரத்தில் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் உட்பட 523 வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டன. ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.
குஜராத் உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு குறித்து கருத்துச் சொன்ன, அகமதபாத் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனரான இயேசு சபை அருள்தந்தை Cedric Prakash, நீதிக்காகப் போராடுகின்றவர்களுக்கும், நாட்டின் சமயச்சார்பற்ற தன்மையைக் காப்பாற்ற விரும்புகின்றவர்களுக்கும் இது நல்ல செய்தி என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.