2012-02-11 15:43:05

கவிதைக் கனவுகள்... க(றை)ரையற்ற கனவுலகம்


சாதிக்கும் ஆவல் கொண்ட மனிதரெல்லாம்
சாதிக்குள் சிக்காமல் வாழணும்
சாதிமத சண்டையெல்லாம் தீர்வதற்கு
பேதமில்லா கண்ணோட்டம் வளரணும்

ஏழை கண்ணீர் துடைக்கணும்
எளியோர் ஏக்கம் தீர்க்கணும்
நோய்நொடியில் வாழ்பவரைக் காக்கணும்
நொந்துபோன உள்ளங்களைத் தேற்றணும்

இறைவனையும் அடிப்படை வாதங்களால்
சிறைப்படுத்தும் சிறுமைகள் அழியணும்
மதவெறியால்...
கறைபட்ட வரலாற்றைக் கழுவணும்
கரையற்ற கனவுலகை எழுப்பணும்








All the contents on this site are copyrighted ©.