Nuba மலைப்பகுதிகளில் அப்பாவி குடிமக்கள் பசியால் இறப்பு - El Obeid ஆயர் கவலை
பிப்.11,2012. சூடானுக்கும் தென் சூடானுக்கும் இடையே இடம் பெறும் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள
Nuba மலைப்பகுதிகளில் அப்பாவி மக்கள், பசியாலும், குண்டுவெடிப்புக்களாலும் இறந்து கொண்டிருக்கின்றனர்
என்று El Obeid ஆயர் Macram Max Gassis கூறினார். கடும்மோதல்களால் துன்புறும் இம்மக்களுக்கு
அருட்பணியாளர்களும் அருள்சகேதரிகளும் தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகின்றனர் என்றும்
ஆயர் Gassis தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜூலையில் தென் சூடான், சூடானிலிருந்து பிரிந்து,
தனிநாடாகச் செயல்படத் தொடங்கியதிலிருந்து, இவ்விரு நாடுகளுக்கிடையே எல்லைப்பகுதி தொடர்பாக,
மோதல்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. இதற்கிடையே, இவ்விரு நாடுகளுக்கும் இடையே
அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் தென்னாப்ரிக்க முன்னாள் அரசுத்தலைவர் Thabo
Mbeki, இவ்விரு நாடுகளும் வன்முறைகளைக் கைவிடும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாக
இச்சனிக்கிழமை தெரிவித்தார். இவ்விரு நாடுகளும் ஒன்று மற்றதன் இறையாண்மையையும், நிலப்பரப்பையும்
மதிப்பதாக இசைவு தெரிவித்திருப்பதாகவும் Mbeki கூறினார்.