புதிய கர்தினால்களுக்குத் தொப்பி, மோதிரம் வழங்கும் திருவழிபாடு
பிப்.10,2012. புதிய கர்தினால்களுக்குச் சிவப்புத் தொப்பி, மோதிரம் வழங்கும், இன்னும்
அவர்களுக்கான ஆலயம் குறிக்கப்படும் திருவழிபாடு, இம்மாதம் 18ம் தேதி உள்ளூர் நேரம் காலை
10.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடைபெறும் என்று பாப்பிறைத்
திருவழிபாட்டு நிகழ்வுகளுக்குப் பொறுப்பான பேருட்திரு Guido Marini அறிவித்தார். இத்திருவழிபாட்டை
நிகழ்த்திய பின்னர், ஏழு அருளாளர்களை புனிதர்களாக அறிவி்ப்பது குறித்த கூட்டத்தில் திருத்தந்தை
கலந்து கொள்வார் என்றும் பேருட்திரு Marini வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. இயேசு சபையின்
மறைசாட்சி அருள்திரு Giacomo Berthieu, மறைசாட்சியான வேதியர் Pedro Calungsod, நாசரேத்
திருக்குடும்ப சபை மற்றும் ஆண்டவரின் பணியாளர்கள் சபைகளை ஆரம்பித்த அருட்பணி Giovanni
Battista Piamarta, போதிக்கும்பணியின் மறைபோதக சகோதரிகள் சபையை தோற்றுவித்த Maria del
Monte Carmelo, நியுயார்க்கின் Syracuse புனித பிரான்சிஸ் மூன்றாம் சபை சகோதரிகள் சபையின்
அருட்சகோதரி Maria Anna Cope, பொதுநிலை விசுவாசிகள் Caterina Tekawitha, Anna Schaffer
ஆகிய எழுவர் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவது குறித்து அக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும்