நைஜீரியப் பேராயர் : தீவிரவாத தாக்குதல்கள் நாட்டின் முதலீடுகளுக்கு முட்டுக்கட்டை
பிப்.10,2012. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் தொடர்ந்து இடம்பெற்று வரும் குண்டு
வெடிப்புகள், அந்நாட்டுக்கு மிகவும் தேவைப்படுகின்ற வெளிநாட்டு முதலீடுகளுக்குத் தடைகளாக
இருக்கின்றன என்று அந்நாட்டுப் பேராயர் Matthew Ndagoso கூறினார். இவ்வாரத்தில், Kaduna
நகர் இராணுவக் குடியிருப்புக்களில் தற்கொலை குண்டு வெடிப்பு இடம்பெற்ற பின்னர், இவ்வாறு
நிருபர்களிடம் கூறிய Kaduna பேராயர் Ndagoso, Boko Haram இசுலாம் தீவிரவாத அமைப்பின்
தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படுமாறு கேட்டுக் கொண்டார். நைஜீரிய அரசுத்தலைவர்
Goodluck Jonathan, இத்தீவிரவாத அமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை வரவேற்றுப்
பேசிய பேராயர், இருதரப்பினரும் ஒருவர் ஒருவர் மீதான காழ்ப்புணர்வுகளைக் கைவிடுமாறு வலியுறுத்தினார்.