அனைத்துலக திருநற்கருணை ஆண்டுக்குத் தாய்வான் திருஅவை தயாரிப்பு
பிப்.10,2012. அயர்லாந்து நாட்டு டப்ளினில் இவ்வாண்டில் நடைபெறவிருக்கும் அனைத்துலக திருநற்கருணை
மாநாட்டுக்குத் தாய்வான் தலத்திருஅவை தயாரித்து வருகிறது. “திருநற்கருணை : கிறிஸ்துவோடும்
ஒருவர் ஒருவரோடும் ஒன்றிப்பு” என்ற தலைப்பில், வருகிற ஜூன் 10 முதல் 17 வரை டப்ளினில்
அனைத்துலக திருநற்கருணை மாநாடு நடைபெறவிருக்கிறது. இதே தலைப்பைப் பிரதிபலிக்கும்
வண்ணம் தேசிய திருநற்கருணை மாநாட்டுக்கும் ஏற்பாடு செய்து வரும் தாய்வான் தலத்திருஅவை,
திருநற்கருணை பற்றிய நூல்களையும் வெளியிட்டுள்ளது.