2012-02-09 15:59:50

குழந்தைகள் மற்றும் இளையோரின் கல்விக்கென இந்திய கிறிஸ்தவத் தலைவர்கள் தகுந்த முயற்சிகள் மேற்கொள்ளவில்லை - கிறிஸ்தவத் தலைவர்


பிப்.09,2012. குழந்தைகள் மற்றும் இளையோரின் கல்விக்கென இந்திய அரசு வழங்கும் பல்வேறு நிதி உதவிகள் உரியவர்களைச் சென்று அடைவதற்கு இந்திய கிறிஸ்தவத் தலைவர்கள் தகுந்த முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்று கிறிஸ்தவப் பொதுநிலையினரைச் சேர்ந்த ஒரு தலைவர் கூறினார்.
ஆந்திராவின் ஹைதராபாத் நகரில் இப்புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாட்கள் கிறிஸ்தவ கல்வியை மையப்படுத்தி, கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய தேசிய ஒருமைப்பாட்டு கழகத்தின் ஒரு முக்கிய உறுப்பினரான ஜான் தயாள் இவ்வாறு கூறினார்.
இந்திய அரசு குழந்தைகளின் கல்விக்கென்று நிதி ஒதுக்கீடு செய்யும்போது, அந்த நிதியைச் சரிவர பயன்படுத்த கிறிஸ்தவ நிறுவனங்கள் தவறுகின்றன என்று ஜான் தயாள் குறைகூறினார்.
இந்திய அரசின் பல தவறுகளால் இளைய தலைமுறையைச் சார்ந்த 20 விழுக்காட்டினரே தங்கள் உயர் கல்வியை முடிக்கின்றனர் என்று இக்கருத்தரங்கில் உரையாற்றிய அரசு அதிகாரி Raymond Peter எடுத்துரைத்தார்







All the contents on this site are copyrighted ©.