2012-02-08 16:01:20

கத்தோலிக்கத் திருஅவையின் பணிகளால் ஈர்க்கப்பட்டு திருமறையைத் தழுவிய இந்தியக் காவல்துறை உயர் அதிகாரி


பிப்.08,2012. கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் உயர்ந்த பணிகளால் ஈர்க்கப்பட்டதால்தான் கத்தோலிக்கத் திருமறையைத் தான் தழுவியதாக இந்தியக் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கத்தோலிக்க அருள் பணியாளர்களும், அருள் சகோதரிகளும் செய்து வரும் பல்வேறு பணிகள், முக்கியமாக HIV நோயால் பாதிக்கப்பட்டோர் நடுவில் அவர்கள் செய்து வரும் பணிகள், யாரும் செல்ல முடியாத கிராமங்களில் ஏழைக் குழந்தைகளுக்கு ஆற்றும் கல்விப் பணிகள் ஆகியவைத் தன்னைப் பெரிதும் ஈர்த்ததேன்று ஆந்திர மாநில சிறப்புக் காவல்துறையின் இணை இயக்குனர் Aruna Bahaguna கூறினார்.
தான் ஒரு கத்தோலிக்கராக மாறியபின், உலகைக் நோக்குவதிலும், தனது பணிகளைச் செய்வதிலும் புதிய கண்ணோட்டம் தனக்கு உருவாகியிருப்பதாக Bahaguna தெரிவித்தார்.
குற்றவாளிகளை இரக்கக் கண்ணோட்டத்துடன் தன்னால் பார்க்க முடிவதாகவும், அவர்களது நிலையில் தன்னை இருத்திப் பார்ப்பதால், அவர்கள் திருந்தி வாழும் வழிமுறைகளில் அதிக கவனம் செலுத்த முடிகிறது என்றும் காவல்துறை உயர் அதிகாரி Aruna Bahaguna மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.