இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராக கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் மீண்டும்
தெரிவு
பிப்.06,2012. இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராக தற்போது பணியாற்றும் கர்தினால்
ஆஸ்வல்ட் கிரேசியஸ் மீண்டும் அந்தப் பொறுப்பில் நீடிக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில்
இம்மாதம் முதல் தேதியிலிருந்து நடைபெற்று வரும் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் 30வது
பொதுக் கூட்டத்தில் இத்திங்களன்று இம்முடிவு எடுக்கப்பட்டது. கடந்த ஈராண்டுகளாக இந்திய
ஆயர் பேரவையின் தலைவராகப் பணியாற்றும் மும்பைப் பேராயர் கர்தினால் கிரேசியஸ், மேலும்
ஈராண்டுகள் இப்பொறுப்பில் நீடிக்கும்படி ஆயர் பேரவை முடிவெடுத்துள்ளது, கர்தினால் அவர்களின்
தலைமைத்துவப் பண்புகளுக்கு தரப்பட்டுள்ள ஒரு நம்பிக்கை வாக்கு என்று பேரவையின் சார்பில்
செய்தியாளர்களிடம் பேசிய அருள்தந்தை பாபு ஜோசப் கூறினார். சீரோ மலங்கரா ரீதி திருஅவையின்
உயர் பேராயர் Moran Mor Baselios Cleemis துணைத்தலைவராகவும், ஆக்ரா பேராயர் Albert D’Souza,
தலைமைச் செயலராகவும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். Thalassery உயர்மறைமாவட்ட
சீரோ மலபார் ரீதி பேராயர் Mar George Valiamattom இரண்டாவது துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.