ஐரோப்பாவில் கடும் குளிர், உக்ரைனில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
பிப்.04,2012. ஐரோப்பாவில், குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில் காலநிலை, மைனஸ் 35 செல்சியுஸ்
டிகிரியாக இருப்பதால், கடும் குளிரினால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. உக்ரைனில்
மட்டும், நூற்றுக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் எனவும், மேலும் 64 பேர் தெருக்களில்
இறந்து கிடந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் குடியிருப்பு வசதி இல்லாதவர்களே
அதிகம் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. இன்னும், போலந்து, சைபீரியா, பல்கேரியா
மற்றும்பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இறப்புக்கள் இடம் பெற்றுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளன.