2012-02-04 15:24:57

உரோமையில் ஆப்ரிக்க, ஐரோப்பிய ஆயர்கள் கூட்டம்


பிப்.04,2012. “இன்று நற்செய்தி அறிவித்தல் : ஆப்ரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே மேயப்புப்பணி ஒத்துழைப்பு. மனிதனும் கடவுளும் : கடவுளின் இருப்பையும் அன்பையும் அறிவிப்பதற்குத் திருஅவையின் பணி” என்ற தலைப்பில் இம்மாதம் 13 முதல் 17 வரை உரோமையில் கூட்டம் ஒன்று நடைபெறவிருக்கிறது.
ஆப்ரிக்க மற்றும் ஐரோப்பிய ஆயர்கள் இணைந்து நடத்தும் இக்கூட்டத்தில், ஆப்ரிக்கா, ஐரோப்பா, திருப்பீடப் பிரதிநிதிகள், பிறரன்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் என சுமார் 70 பேர் கலந்து கொள்வார்கள்.
2004ம் ஆண்டில், இவ்விரு கண்டங்களுக்கு இடையே தொடங்கிய மேயப்புப்பணி ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இக்கூட்டம் இடம் பெறவிருக்கின்றது.
இவ்வாண்டு அக்டோபரில் தொடங்கவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்குத் தயாரிப்பாகவும் இக்கூட்டம் இடம் பெறவிருக்கின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.