2012-02-04 15:27:32

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு 1,600 கைதிகள் விடுதலை


பிப்.04,2012. இலங்கையின் 64வது சுதந்திர தினமான இச்சனிக்கிழமையன்று 1,600 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என அறிவிக்கப்ப்டடுள்ளது.
சிறு குற்றங்களுக்காகத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளும், 70 வயதுக்கு மேற்பட்ட சில கைதிகளும் அரசுத்தலைவரின் பொது மன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளை மூடி அதற்குப் பதிலாக மறுவாழ்வு மையங்களை அமைப்பதே அரசுத்தலைவரின் நோக்கமாக உள்ளதாகவும், சிறைக் கைதிகளின் மறுவாழ்விற்காக இருபது கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கைதிகளின் மறுவாழ்வு மற்றும் சிறைச்சாலை சீர்திருத்தத் துறை அமைச்சர் Chandrasiri Gajadeera தெரிவித்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.