2012-02-03 16:00:06

குவைத்தில் முதலாளிகளின் நிர்ப்பந்தத்தில் துன்புறும் இலங்கைப் பெண்கள்


பிப்.03,20102. இலங்கையிலிருந்து குவைத் நாட்டுக்கு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் பணிப்பெண்கள், அந்நாட்டு வீட்டுத் தலைவர்களால் தகாத தொழிலுக்கு ஏலம் விடப்படுவதாக அங்கிருந்து நாடு திரும்பிய பெண்கள் தெரிவித்துள்ளனர் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதியான நிலைக்குள்ளான பணிப்பெண்களில் மற்றுமொரு பிரிவினர் இவ்வியாழன் காலை நாடு திரும்பியுள்ளனர்.
விமானம் மூலம் சுமார் 70 பணிப்பெண்கள் இலங்கையை வந்தடைந்தனர். இவ்வாறு நாடு திரும்பியப் பணிப்பெண்களில் அதிகமானோர், குவைத் மற்றும் சவுதி அரேபிய நாடுகளில் பணியாற்றியவர்கள் எனக் கூறப்படுகின்றது.
உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்பதுடன் வேலைவாய்ப்பு நிலையத்தினால் உறுதியளிக்கப்பட்டவாறு தாங்கள் நடத்தப்படவில்லை என்றும் பணிப்பெண்கள் கவலை தெரிவித்தனர்.
நாட்டிற்குத் திரும்பியவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்க வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஊடகச் செய்தி கூறுகின்றது.








All the contents on this site are copyrighted ©.