உலகம் பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும். உலகம் தோன்றின மறையும், மறைந்தன
தோன்றும். உலகம் பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும் உலகம் வளர்வன
தேயும், தேய்வன வளரும். உலகம் உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும் உலகம் உவப்பன
வெறுக்கும், வெறுப்பன உவக்கும் உலகம் விரும்பிப் போனால் விலகிப் போகும். உலகம் விலகிப்
போனால் விரும்பி வரும் உலகம் நிலையில்லாதது, மாறிக்கொண்டே இருப்பது. பட்டினத்தார்
உணர்த்திய உலகம் இது. மனமே, இதை நீ உணரும் நேரம் இக்கனமாக இருக்கட்டும். இன்பம்
வரும் இன்னல் வரும் இரண்டுமே மாறி மாறி வரும் இரண்டிலும் சமநிலை காக்க கற்றுக்கொள்.